வண்டிமறித்தம்மன் கோவில் கொடை
வண்டிமறிச்சம்மன் கோவில் கொடை! பல விதமான தெய்வங்களைக் கொண்டது எங்கள் நெல்லை மாவட்டம். ஊர் பெயர்களை விட தெய்வங்களின் பெயர்கள் அதிகம்! ஊருக்கு நாலு பெயர் கொண்ட தெய்வம். ஒவ்வொன்றிற்கும் ஓர் கர்ண பரம்பரைக் கதை. அப்படியாக எனக்கு அறிமுகமான பிரம்மாண்ட தெய்வம் தான் அம்பாசமுத்திரம் வண்டிமறித்த அம்மன் - பிரம்மாண்டம் என்றால் எதோ தஞ்சை பெரிய கோவில் போல எண்ணக்கூடாது; உருவத்தில் நான் பார்த்த முதல் பெரிய தெய்வம். அம்மன் என்று பொதுவில் அழைக்கப்பட்டாலும் ஒரு அம்மாளும் ஒரு சாமியுமாக இருவருடைய நிலையம் தான் அது. பல நாட்கள் மண் மேடாக கிடந்த இடத்தில் ஒரு அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு அம்பைக்கு சென்ற போது ஓலைத் தட்டி வைத்து மறைக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. ஆச்சியிடம் கேட்டதற்கு 'இந்த வருசம் வண்டி மறிச்சம்மங்கோயில் கொடை உண்டுலா அதுதான் வேளார் வந்து அம்மாளைச் செய்தாரு. அந்த அம்மா நான் வெயில்லயும் மழையிலயும் கிடக்கனும், ஒவ்வொரு கொடைக்கும் என் நிலையத்தை திருப்பிச் செய்யனும்னு சொன்னுச்சாம்' என்றாள். எப்படி மண் உருவம் செய்து கோவிலில் நேர்ந்து விடுவார்களோ அதேபோல அந்த வண்டி மறிச்சம்மன் மண் மேடு என்பதி